![]() |
||||||||
|
தாயகம் சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும்
யேர்மனி Landau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கணேசகுமாரன் அவர்கள்
27-11-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னுத்துரை, ராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும், மஞ்சுளேஸ்வரி ;அவர்களின் அன்புக் கணவரும், அதிசன், வினுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், பரமேஸ்வரி(சுவிஸ்) , மகேஸ்வரி(இலங்கை), மாசிலாமணி(சுவிஸ்) சந்திரலீலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெயலோகராஜா(சுவிஸ்), பரமேஸ்வரன்(இலங்கை), நாதன்(சுவிஸ்), லக்ஸ்சுமிகாந்தன்(கனடா), சிறீநாதன்(கனடா), இராஜேஸ்வரி(இலங்கை), புவனேஸ்வரி, குகனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், பகீரதி, சிவபாதசுந்தரம் இராசலிங்கம், பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகலனும், ஜனூயா(சுவிஸ்), அசோயன்(சுவிஸ்), அபிரன்(சுவிஸ்), அஜீர்(சுவிஸ்), ஜீவிதா(இலங்கை), கார்த்திகா(இலங்கை), அனுசன்(கனடா), அனுர்ஜா(கனடா), அரவின்(கனடா), அரிசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும், ராகவி, அபிநயா, காவியா, டக்சியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 02-12-2011 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01.00 மணிமுதல் 05.00 மணிவரையும், 03-12-2011 சனிக்கிழமை அன்று மு.ப 10.00 மணிமுதல் பி.ப 05.00 மணிவரையும், 04-12-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணிமுதல் பி.ப 05.00 மணிவரையும், Hauptfriedhof, Zweibruecker Str. 44, 76829 Landau என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 05-12-2011 திங்கட்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் 10.00 மணிவரையும் இறுதிகிரியைகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது
இவ்அவறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் தொடர்புகளுக்கு
|